Skip to content
Home » தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Senthil
திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக 2 பேருக்கு ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சும்மா இருந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதை குறித்து கேட்டு தகராறு செய்து தம்பி செல்வமணியை அண்ணன் ராஜேந்திரன் மண் வேட்டியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வமணி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து செல்வமணி மனைவி தங்கமணி முசிறி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!