Skip to content

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 4 ந்தேதி இறந்தார். இந்த சம்பவம் குறித்து விஏஓ அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!