Skip to content

பாஜக வேட்பாளருக்கு காடுவெட்டியில் பாமகவினர் உற்சாக வரவேற்பு….

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவி, முன்னாள் மாநில வன்னியர் சங்க செயலாளர் திருமாவளவன், பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைகழக

பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் காடுவெட்டியில் அமைந்துள்ள வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கார்த்தியாயினி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி….  தனி மனித வளர்ச்சிக்காக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி இனி இருக்காது என்றும், மக்கள் வளர்ச்சிக்காக குரல் கொடுக்காதவர் தான் திருமாவளவன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!