Skip to content
Home » பாஜக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

பாஜக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பாஜக ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த விதமான பயனளிக்காத நிதிநிலை அறிக்கையை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது, போராட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் இல்லை என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதை தனியார் முதலாளிகள்

பயன்பெறும் வகையில் உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு கூலித்தொகை மிகவும் குறைவாக வழங்குவதாகவும் குற்றம் சாட்டி ஒன்றிய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடைபெற்றது, தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் நிதிநிலை அறிக்கை குறித்த விளக்க உரையாற்றினார்கள், போராட்டம் நிறைவில் நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர், தொடர்ந்து போராட்டக்காரர்கள் இந்திய அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பி கலைந்து சென்றனர், போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!