Skip to content
Home » மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

  • by Senthil

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து 13 பைக்குகளை மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சுபம் பாஸ்கர் பவார் என்ற  அந்த இளைஞர் தன்னுடைய பெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குகளை  மட்டும் குறிவைத்து திருடினாராம்.  அப்படி திருடிய  பைக்குகளில் ஒவ்வொரு நாளும் ஒரு பைக்கில் தன்னுடைய  தோழிகளை சவாரி அழைத்து செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தாராம். இப்படி பெண் தோழியுடன் பைக்கில் சென்றபோது தான் அவர் சிக்கிகொண்டார். திங்கள் கிழமை அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் லத்தூர், சோலாப்பூர் மற்றும் புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ரூ.16.05 லட்சம் மதிப்புள்ள 13 திருடப்பட்ட பைக்குகளை போலீசார் மீட்டனர். மேலும் இது தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!