பாரதியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி டில்லியில் தனது இல்லத்தில் வைத்து இன்று வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இது பொக்கிஷம்,தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியாருக்கு எனது இதய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
