Skip to content

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி புத்தூரில் நடந்தது. முகாமை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர், மாவட்டக் கவுன்சிலர் தாமரைச் செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர் தீபக் உட்பட பங்கேற்றனர். இதில் டாக்டர்கள் குலசேகர பாண்டியன், அரவிந்த் ராஜா, அழகு சிலம்பரசி, பிரிய தர்ஷினி, பிரித்திகா, பொது மருத்துவம் கெளரி சங்கர், அறுவைச் சிகிச்சை சந்திர குமார், குழந்தை நலம் ஹீரா, பல் ஓவியா, சித்தா கனி மொழி, ஆயுஷ் சையத் கிராம மக்களிடம் பரிசோதனை மேற்க் கொண்டனர். இதில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் , கர்ப்பப்பை வாய் பரிசோதனை, ஈசிஜி , இரத்தப் பரிசோதனை உட்பட மேற்க் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!