Skip to content
Home » மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

  • by Senthil

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணாளன் முன்னிலையில் இன்று இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முதல் வழக்கில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது 15 பக்கங்கள், 2வது வழக்கில் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய நல்லதம்பி உட்பட 8 பேர் மீது 25 பக்கங்கள் என இரு வழக்குகளிலும் சேர்த்து 43 பக்க குற்றப் பத்திரிகையை இன்ஸ்பெக்டர் பாரதி குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!