Skip to content
Home » அய்யனார் கோவிலை பொதுக்கோவிலாக்க வேண்டும்…கோர்ட்டில் திரண்ட மக்கள்…

அய்யனார் கோவிலை பொதுக்கோவிலாக்க வேண்டும்…கோர்ட்டில் திரண்ட மக்கள்…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் காவல் தெய்வங்களாக வீரனார், ஐய்யனார் உள்ளது. ஊரின் நடுவே திரெளபதி அம்மன் மாரியம்மன் கோயில் உள்ளது. இவைகள் அணைத்தும் அரசு பொது இடத்தில் ஊர் மக்களின் வரி பணத்தில் 1993ல் கட்டபட்டு பொதுகோயிலாக அணைத்து வகையறா மக்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயில்களை கிராமத்தைச் சேர்ந்த 6 நாட்டார்கள் இணைந்து நிர்வாகம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடந்தையார் வகையறாவை சேர்ந்த ஒரு நாட்டார் மற்றும் சிலர் இணைந்து அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இந்த கோவில் தங்கள் வகையராவுக்கு மட்டுமே சொந்தமானது என்று தெரிவித்தனர்.இதனை கண்ட மற்ற 5 நாட்டவர்கள் மற்றும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதற்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் எழிலரசன் என்பவர் வீரனார் கோவில் தங்களது வகையராவுக்கு மட்டுமே சொந்தம் என்று செந்துறை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் இந்த கோவில் யாருக்கு சொந்தமானது அல்லது ஊர் பொது கோவிலா என்று முடிவு எடுக்கும் வகையில் ஆட்சேபனை உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவிக்கும்படி கேட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து இன்று 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீதிமன்றத்திற்கு திரண்டு வந்து ஊர் பொதுக்கோயில் தான் என்று ஆதரவு தெரிவித்தனர் அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்துழைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் திடீரென திரளான கிராம மக்கள் திரண்டு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!