Skip to content

அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலய பிரம்மோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி புறப்பாடு ஹம்ஸ, சிம்ம, சேஷ, கருட, அனுமந்த, யானை வாகனத்தில் நடந்தது. 23ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம்

நடந்தது. நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்வான திருத்தேர் புறப்பாடு நடந்தது. விசேஷ அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணா, கிருஷ்ணா எனக் கூறியப் படி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நாலு வீதிகளில் வலம் வந்தது. இதில் கோவில் நிர்வாக அறங்காவலர் பாலாஜி உட்பட அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!