Skip to content
Home » அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

  • by Senthil

குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல் தேவையை இந்தியா அறியும் . எங்களிடம் சொந்தமாக எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இல்லை.

எனவே சூரிய காற்று அணு மற்றும் நீர் சக்திகளில் எதிர்கால தேவையை சார்ந்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக புதிய கொள்கைகளை உருவாக்கி ஒவ்வொரு வழியிலும் ஆதரவு அளிக்கிறோம். வீடுகளில் மின் உற்பத்திக்கு 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி அயோத்தி உள்பட 16 நகரங்களை மாதிரி சோலார் சிட்டியாக உருவாக்க பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!