Skip to content

கிரிக்கெட்…. ரோகித், கோலி, அஸ்வினுக்கு விருது

  • by Authour

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் உலக கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த முக்கிய வீரர்களுக்கு  சியாட்  விருதுகள் வழங்கப்பட்டன.   கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதே போல சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை விராட் கோலி பெற்றார். அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் போன்ற சாதனைகளை விராட் கோலி படைத்திருந்தார்.

மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பவுலருக்கான விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது. டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு தனது சிறப்பான பங்களிப்பை அளித்த முன்னாள் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான விருது ஜெய்ஸ்வாலுக்கும், சிறந்த டெஸ்ட் பவுலருக்கான விருது தமிழக வீரர் அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த டி20 பேட்ஸ்மேனுக்கான விருதை இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டும், சிறந்த டி20 பவுலருக்கான விருதை நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தியும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!