Skip to content

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரமணி. இவர் தனது மனைவி, மாமனார், மாமியார், குழந்தைகளுடன், குடும்பத்துடன் அதே பகுதியில் தங்கையின் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் மேட்டு தெரு அருகே சென்ற போது எதிரே வந்த கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ ஓட்டுனர் வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் காயம் அடைந்த நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீரமணி,சரிதா, செளமியா ஆகிய 3 பேர் பலத்த எலும்பு முறிவு காரணமாக மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!