Skip to content
Home » சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.  முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்தார்.

இதனை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பின்னர், 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றினார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கண.கவர் நடனங்கள், தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின்  நடனங்கள் நடந்தது.  கலைநிகழ்ச்சிகளை  முதல்வர், கவர்னர் மற்றும் முக்கிய பிரமுகர்கள்

விழாவில் சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மற்றும் அமைச்சர்கள்,  தலைமை செயலாளர் இறையன்பு, நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!