Skip to content

ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க 3.5 ஏக்கர் நிலம் மீட்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கையகம் செய்யப்பட்ட சர்வே எண் 143/4 ல் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் மீட்டனர். 3 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு புதர் மண்டிய வேலி, கருவேல மரங்களால் சூழ்ந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் இந்நிலத்தில் மனை வரைபடம் தயார் செய்து தகுதி உள்ள பயனாளிகளுக்கு இலவச

வீட்டு மனை பட்டா வழங்கும் பொருட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் வட்டாட்சியர் சம்பத், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் ஆனந்தன், காவல் ஆய்வாளர் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ், தனி வருவாய் அலுவலர் ஆரோக்கியராஜ், தனி சார் ஆய்வாளர் நில அளவை புகழேந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!