Skip to content

13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்

சட்டமன்ற கூட்டம் இன்று முடிவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நாளை  திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெறும். அத்துடன் சட்டமன்ற கூட்டம் நாளை ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து 11ம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து அனைத்து கட்சியினர் பேசுவார்கள். 13ம் தேதி முதல்வர் உரையுடன் சட்டமன்ற கூட்டம் நிறைவுபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!