Skip to content

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப்  மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது, முற்போக்கு கொள்கையோடு பெரும்மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் வழக்கமான நிகழ்வுகள் தொடங்கியது.

error: Content is protected !!