Skip to content
Home » புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய  ஊறல் போடப்பட்டு இருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எஸ்பி. வந்திதாபாண்டே,  கூடுதல் எஸ்.பி. பிரபாகரன்  மற்றம்  தனிப்படையுடன் கருக்காகுறிச்சி தெற்கு கிராமத்திற்கு அதிரடியாக சென்று அங்கு இருந்த சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தார்.  ஊறல் 500 லிட்டர் இருக்கும். இதை ஊறப்போட்ட நபர் யார், என அந்த கிராமத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதுகை மாவட்டத்தில் எந்த பகுதியிலாவது சாராயம், சாராய ஊறல் இருப்பது பற்றி தகவல் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!