Skip to content
Home » சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அருகில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி வெங்கடேசன் கட்டணம் கேட்டுள்ளார் அப்பொழுது காரில் இருந்த பாமக அரியலூர் நகர செயலாளர் விஜி, பாமக கட்சியை சேர்ந்த கோவிந்தபுரம் நந்தகுமார்,காட்டுப்பிரிங்கியத்தை சேர்ந்த முத்து மற்றும் பெயர் விலாசம் தெரியாத 5 பேரும் சேர்ந்து வெங்கடேசனை ஏன் காரை நிறுத்தினாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கடேசன் உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் எஸ் ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!