Skip to content
Home » துக்க நிகழ்ச்சிக்கு வந்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை….

துக்க நிகழ்ச்சிக்கு வந்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி வேன் ஓட்டுநர். இவர் ராங்கியம் கிராமத்தில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்திற்கு ஆட்களை ஏற்றி வந்ததுள்ளார்‌.

துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீண்டும் ஊருக்கு கிளம்பும் போது வேன் ஓட்டுநரை காணவில்லை. இதனையடுத்து வேன் ஓட்டுநரை அனைவரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு முந்திரி தோப்பில் பேன்ட் மூலம் இறந்த நிலையில் தூக்கில் தொங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!