Skip to content

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காபெரோஸ் கான் அப்துல்லா  உத்தரவின்படி “சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது.

இந்த குறைதீர் முகாம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. காமராஜ் அவர்கள்( மதுவிலக்கு அமல் பிரிவு) தலைமையில் ,துணை கண்காணிப்பாளர்கள்

இராஜாசோமசுந்தரம் (ஜெயங்கொண்டம் உட்கோட்டம்), திரு.வெங்கடேசன் அவர்கள் (SJ & HR),  சங்கர் கணேஷ் அவர்கள்( அரியலூர் உட்கோட்டம் ) முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள்.இந்த முகாமில் மொத்தம் 25 மனுக்கள் விசாரிக்கப்பட்டன , 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற‌ மனுக்கள் மீது தீர்வு காண மேல் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!