Skip to content
Home » அரியலூர்…. ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு…

அரியலூர்…. ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளான திருமானூர் கடை எண்.I, திருமானூர் கடை எண்.II மற்றும் கீழப்பழுவூர் கடை எண்.II ஆகிய நியாய விலைக் கடைகளை மாவட்ட கலெக்டர்  ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்கள் இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!