Skip to content
Home » சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து , கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை பறிமுதல் செய்தமைக்காகவும்,

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் வனிதா நீதிமன்ற அலுவலில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு விரைவாக பணிபுரிந்தமைக்காகவும்,

செந்துறை காவல் நிலைய காவலர் செந்தில் முருகன், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நான்கு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி புரிந்தமைக்காகவும்,

மீன்சுருட்டி காவல் நிலைய காவலர் பிரபாகரன் மீன்சுருட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தகவல் சேகரித்து னசிறப்பாக செயல்பட்டமைக்காகவும்,
இவர்கள் பணியை பாராட்டி தமிழக காவல்துறை இயக்குனர் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மத்திய மண்டல ஐஜி க.கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி A.சரவணசுந்தர் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!