Skip to content

அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராகவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார் ஊரான புலியூர் சென்றுள்ளார் இந்நிலையில் ரமேஷின் வீட்டிலிருந்த அவரது தாயார் பன்னீர் செல்வி நேற்று வீட்டை பூட்டி விட்டு அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார் இந்நிலையில் நேற்று இரவு ரமேஷின் வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்திய மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 15 பவுன் நகை 11 வெள்ளி பொருட்களை திருடி சென்றனர் இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கொள்ளையர்களின் அடையாளங்களை சேகரிக்கும் வகையில் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!