Skip to content
Home » அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக எழுத்தாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 50,000 ரூபாய் முன் பணமாக பெற்றுக்கொண்டார். பின்னர் நிரந்தர பணி வாங்கித் தருவதாக கூறியும், பிரகாசம் மற்றும் பிரகாசத்தின் உறவினர்கள் மற்றும் அவரின் நண்பர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்தாளர் பணி வாங்கித் தருவதாக கூறியும் ரூபாய் 69,35,000 பணத்தை குணசேகரன் அவரது வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுக் கொண்டு.
குணசேகரன் போலிப் அரசு பணி நியமன ஆணைகளை தயார் செய்து வழங்கி உள்ளார். போலி பணி நியமன ஆணை குறித்து கேட்ட பிரகாசத்தை கொலை செய்து விடுவேன் என்று குணசேகரன் மிரட்டி உள்ளார். இவர் 2019 காலகட்டத்தில் அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் சிறிது காலம் தற்காலிக பணி செய்தாக தெரிகிறது.

இது குறித்து பிரகாசம் அளித்த புகார் அடிப்படையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமான விசாரணைக்கு பின் குணசேகரன் மீது 417,420,406,465,468, 471 ,506 (i) IPC உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, எதிரி குணசேகரனை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கிய மேரி, உதவி ஆய்வாளர் அமரஜோதி மற்றும் மற்றும் காவலர்கள் , குணசேகரனை அரியலூர் பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து குணசேகரனை காவல்துறையினர் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து , நீதிமன்ற உத்தரவின் படி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!