Skip to content
Home » குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது…..

குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது…..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அர்சுனன் இவருக்கு இரண்டு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இளைய மகன் அருண் திருப்பூரில் வேலை பார்த்த போது கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது அர்ச்சுணனுக்கு தெரிய வர ஒரு அக்கா, அண்ணன் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் நீ திருணம் செய்துள்ளாய் என அடிக்கடி போதையில் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இரவு அதே போல் போதையில் தகராறில் ஈடுபடும் போது கத்தியை எடுத்த அருண் தனது தந்தை அர்ச்சுனனின் கழுத்து மற்றும் தலையின் பின் புறம், கன்னம், நெற்றி ஆகிய‌ பகுதியில் கிழித்து கொலை செய்துள்ளார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரியவர போலீசார் சம்பவயிடத்திற்க்கு சென்று அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளானர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!