Skip to content
Home » கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்கிற தமிழரசன்  . இவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாைய பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து பசுபதி இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (36)   மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த செல்வம்(34) ஆகிய இருவரும் தான் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.800/- பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், கடந்த ஜனவரி மாதம் இரும்புலிக்குறிச்சியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியதும், இரு நாட்களுக்கு முன்னதாக மயிலாடுதுறை பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது. மேலும் எதிரி விஜயகுமார் மீது தஞ்சாவூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பின் எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!