Skip to content

அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

அரியலூர்  பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செட்டி ஏரியில் அமைந்துள்ளது பூங்கா. இப்பூங்காவின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் உடலில் பல்வேறு காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரியலூர் காவல் துறையில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையான நபர் குறித்தும் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். செட்டி ஏரி வளாகத்தில் வார சந்தை உள்ளது. வார சந்தைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பகுதியிலேயே உடலில் பல்வேறு காயங்களுடன் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!