Skip to content

கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை… அரியலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்வது சட்ட விரோதமானது. மேற்படி அனுமதியில்லாத வட்டி தொழில் மூலம் கந்து வட்டி, மீட்டர் வட்டி, தினசரி வட்டி, மணிக்கு மணி வட்டி என வட்டி வசூல் செய்து பொதுமக்களுக்கு துன்பம் விளைவிப்பவர்கள் மீது தமிழ்நாடு கந்து வட்டி தடை சட்டம் 2003-ன் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது உரிய புகாரினை போலீசாருக்கு தெரிவித்து மேற்படி கொடுமையில் இருந்து தங்களை மீட்டு கொள்ளலாம். மேற்படி புகார் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு எஸ்.பி எச்சரித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!