Skip to content
Home » சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிய பல‌முறை பாலியல் வன்தாக்குதல் செய்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் அடித்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கடந்த ஜூலை மாதம் அளித்த புகார் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு 27.12.2022 இன்று அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .நீதிபதி ஆனந்தன் எதிரி கலியன் என்கிற கருணாநிதியை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்கும் படியும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியிலிருந்து ஏழு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!