Skip to content

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தடாகோவில், கோவிலூர்,

சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!