Skip to content

அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை  ரோட்டில்  உள்ள பட்டாசுக்கடையில் இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  அப்போது அங்கு யாரும் இல்லாததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள  நகைக்கடை, பாத்திரக்கடையும் பற்றி எரிந்தது.

உடனடியாக  தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்க போராடியது.  பல மணி  நேரம் போராடி தீயை

அணைத்தனர்.  அதற்குள்  நகைக்கடை, பாத்திரக்கடையில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு விட்டது.  பாத்திரக்கடையில் இருந்த பாத்திரங்கள் அனைத்தும் எரிந்து போனது.  சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.  விபத்து குறித்து   அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!