Skip to content
Home » இந்தியாவுக்கு 2வது வெண்கலம் …..மனு பாக்கர் இணை வென்றது

இந்தியாவுக்கு 2வது வெண்கலம் …..மனு பாக்கர் இணை வென்றது

  • by Senthil

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற  10 மீட்டர்  ஏர் பிஸ்டல்  துப்பாக்கிச்சுடும் இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்திய இணை  சரப்ஜோத் சிங்-  மனு பாக்கர்  ஜோடி  16-10 என்ற புள்ளிக்கணக்கில்    வெண்கல பதக்கம் வென்றனர். ஏற்கனவே  மனு பாக்கர் தனி நபர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வென்ற நிலையில் இப்போதும் மனு பாக்கர் ஜோடி ஒரு வெண்கலம் வென்று உள்ளது.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இதுவரை இந்திய வீராங்கனை பதக்கம் பெற்றதில்லை. ஆனால் இந்த முறை  ஒரே வீராங்கனை  துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனு பாக்கர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 22 வயதான பாக்கர் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!