Skip to content
Home » டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார். மாலையில் விஷாலியை வீட்டிற்கு சென்ற அவரது சித்தப்பா செங்குட்டுவன் என்பவரின் மகன் பிரதீப் (26) (டிப்ளோமோ முடித்து விட்டு வீட்டில் இருந்தவர்)என்பவர் பைக்கில் அய்யம்பேட்டைக்கு சென்று அழைத்து வந்து கொண்டு இருந்தார் நல்லிச்சேரி பகுதியில் ஒரு வளைவில் பிரதீப் வேகமாக பைக்கை திருப்பி உள்ளார். இதில் பைக் நிலைதடுமாறி சாலையோரத்திலுள்ள மரத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த விஷாலி மற்றும் பிரதீப் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் இருவரின் உறவினர்கள், விஷாலி படித்த பள்ளியின் ஆசிரியைகள், சக மாணவிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!