முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் தமிழகத்தில் ஒருபோதும் மூடப்படாது – கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் முதல்வர் மருந்தகம் மற்றும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பின் தொடர்ந்து சிங்காரத்தோப்பு அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ..
முதல்வர் மருத்துவம் இந்த மாதம் இறுதிக்குள் துவக்க வைக்கப்படும். 186 மருந்துகள் தரமுள்ள மருந்துகள் விற்கப்படும். 90% ஜனவரி மெடிசன் விற்கப்படும். சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் விற்கப்படும். இதுவரை 300 தனி நபர்கள் லைசன்ஸ் பெற்றுள்ளார்கள் 440 சொசைட்டிகள் லைசன்ஸ் பெற்றுள்ளனர் 402 பேர் லைசன்ஸ் பெற உள்ளனர். 898 கடைகள் தயார் நிலையில் உள்ளது. முதல் நாள் சென்னையில் துவக்கப்பட்டு மறுநாள் தமிழக முழுவதும் கடைகள் தயார் நிலையில் இருக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11.44லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2489 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது அதன் மூலம் 1.4 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 3.3 லட்சம் கோடி கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது. 25,000 கடைகள் புதுப்பிக்க வேண்டி உள்ளது. தற்பொழுது 17.4 புதிய கார்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 1.5 லட்சம் புதிய காடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2.4லட்சம் பேர் புதிதாக விண்ணப்பட்டுள்ளார்கள். தேர்தல் நேரத்தில்தான் அரசி பருப்பு பற்றாக்குறை இருந்தது அவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.. கோஆப்பரேட்டிவ் வங்கி மூலம் இதுவரை 14 ஆயிரத்து141 கோடி வேளாண்கடன், 15.69 லட்சம் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. கோ ஆப்பரேட்டிவ் வங்கிகள் மூலம் 26 வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை உயர்த்தப்படுமா?
கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு உற்பத்தி என்பது அதிகமாக உள்ளது மேலும் கடந்த ஆண்டு காட்டிலும் தற்போது அரசுக்கு கூடுதலான தொகை வழங்கப்பட்டு வருகிறது. 5.89 லட்சம் இறந்தவர்களுடைய ரேஷன் கார்டுகளை நீக்க வேண்டியது உள்ளது. 26.69 லட்சம் இறந்தவர்களை பொது கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். போலி ரேஷன் கார்டுகளை அகற்றுவதற்கு தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு அவ்வபோது நீக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் தயவு செய்து கடத்தாதீர்கள் இது ஒரு நல்லதமான மக்களுக்கு பயனுள்ள திட்டம் .. ரேஷன் அரிசி தரமாக இருப்பதால் அதில் சிலர் முறுக்கு கூட செஞ்சு ரீல்ஸ் போடுகிறார்கள்.. அரிசி தேவை உள்ளவர்கள் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் வேண்டாம் என்றால் அரிசி வேண்டாம் என்று சொல்லி காடை மாற்றிக் கொண்டால் வேறு ஒருவருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்…
தற்போது நியாய விலை கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன அதன் மூலம் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். 2500 லிருந்து 3000 பேர் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளனர் பணி ஓய்வு பெறுபவர்கள் பின் புதிய அலுவலர்கள் நியமிக்கப்படும். மாநிலம் முழுவதும் 2600 காலிப் பணியிடங்கள் உள்ளன. கூட்டுறவுத்துறை மூலமாக இரண்டு மருந்துகள் செயல்பட்டு வருகின்றன ஒன்று கூட்டுறவு மருந்தகம் மற்றொன்று அம்மா மருந்தகம் அது தொடர்ந்து செயல்படும். ஒரு புதிய முயற்சியாக ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகம் என்று திறக்கப்படுகிறது. இந்த மரந்தகத்திற்காக மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன சிறப்பு பொது மருந்துகள் 10% சதவீதம் விலை குறைவாக கிடைக்கும். பொதுமக்கள் தங்கள் மருந்துக்கான செலவு மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.