திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர் SS.ராவணன், SKD.கார்த்திக்,
கண்ணூத்து பொன்னுச்சாமி, பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.சுரேஷ்குமார், மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.