Skip to content
Home » கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுவாதி மாலிவால் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிபவ் குமார் அங்கு இல்லாததால் அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சுவாதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது, கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமார் 8 முறை என் கன்னத்தில் அறைந்தார். என்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார். என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. கொன்று புதைப்பேன் என மிரட்டினார். மேலும் அவர் என் முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளிலும் தாக்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!