Skip to content
Home » அமராவதி தடுப்பணையில் 132 கன அடி உபரிநீர் வெளியேற்றம்… விவசாயிகள் மகிழ்ச்சி..

அமராவதி தடுப்பணையில் 132 கன அடி உபரிநீர் வெளியேற்றம்… விவசாயிகள் மகிழ்ச்சி..

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் 132 கன அடி உபரிநீரை வெளியேற்றப்படும் கழுகு பார்வை காட்சி: பொதுமக்கள் மற்றும் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு

நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணை 4 சென்டிமீட்டர் உயர்ந்து தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 132 கன அடி உபரிநீரை வெளியேற்றப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றில் நீர்வரத்து காரணமாக பொதுமக்கள் மற்றும் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!