Skip to content

தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை வெளியிட்டுள்ளார். பத்வா என்பது இஸ்லாமிய சட்டம் அல்லது இஸ்லாம் பற்றிய ஒரு கேள்விக்கான  தீர்ப்பு என்றும் சொல்லப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் மீத பத்வா விதித்துள்ள  மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி இதுதொடர்பாக  வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “விஜய் முஸ்லிம் விரோதி.. அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன.

மது அருந்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாததுமற்றும் பாவம் என்று இஸ்லாமிய சட்ட விதிகள் கூறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அத்தகைய நபர்களை நம்ப வேண்டாம். அவர்களை நிகழ்வுகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். திரைப்படத் துறையில் ஒரு தொழிலுக்குப் பிறகு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்” என்று ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறி உள்ளார்.

 

error: Content is protected !!