Skip to content

எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய ஆபரேசனுக்காக  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  அவருக்கு இருதயத்தில் ஆபரேசன் செய்ய வேண்டும் என பரிந்துரைத்த சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியின் அறிக்கை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை கோர்ட்டில் தெரிவித்தது.

அத்துடன் எய்ம்ஸ் மருத்துவர்களைக்கொண்டு அவரது உடல்நிலையை நாங்கள் ஆய்வு செய்வோம் என்றும் தெரிவித்தது. இதற்கு கோர்ட்டும் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து டில்லியில் இருந்து  எய்ம்ஸ்  மருத்துவ க்குழு இன்று சென்னை வருகிறது. அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்தும், ஓமந்தூரார் மருத்துவமனை அளித்த மருத்துவ பரிந்துரைகள் குறித்தும், காவேரி ஆஸ்பத்திரியில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்வார்கள். பின்னர் காவேரி மருத்துவக்குழுவுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!