Skip to content

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில்தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப் போக அது கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெற உள்ளது. இதற்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.ஆனால் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வருகிற 31 மற்றும் 1-ந் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!