சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. அதிமுக உறுப்பினர் உதயகுமார் திருமங்கலம் நகராட்சி குடிநீர்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்தார். தொடர்ந்து கேள்வி நேரம் பகுதி நடந்து வருகிறது.