அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எடப்பாடிக்கு எதிராக வைரமுத்து என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார்., ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பின் வழக்கறிஞர்கள் 2 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.
இந்த நிலையில் 3ம் நாள் விவாதம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. நீதிபதிகள் மதிய உணவு அருந்த செல்லாமல் வழக்கு விசாரணையை நடத்தினர். 2.20 மணி வரை விவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து விசாரணையை வரும் 10 ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். எனவே இந்த வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி(செவ்வாய்) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்.
நேற்று முன்தினம் இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. பொறுமையாக விசாரிக்க விரும்புகிறோம் என கூறினர்.
இதுவரை வைரமுத்து தரப்பில் மட்டுமே விவாதம் நடந்துள்ள நிலையில் 10ம் தேதி ஓபிஎஸ் தரப்பில் வாதம் செய்யப்படும். அதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் எடப்பாடி தரப்பு பதில் அளிக்கும் எனவே அடுத்த வாரம் முழுவதும் விவாதம் நடைபெறலாம் என தெரிகிறது.