Skip to content
Home » பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

பல விளம்பரங்களில் நடித்துள்ள விஷாகா சிங் 2007 ம் ஆண்டு ‘கணப்பக்கம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக ‘பிடிச்சிருக்கா’ என்கிற படத்தில் நடித்தார். அடுத்தடுத்து இந்தி, கன்னடம், ஆங்கிலம், என பல்வேறு மொழிகளில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் நடித்தார்.  இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலமாற்றத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சினையால் விஷாகா பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதற்காக அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விரைவில் அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஷாகா சிங் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், இந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்கள் நடித்து வருகிறார். இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விஷாகா சிங் தெரிவித்துள்ளதாவது, “நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது… கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது. ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. ஒரு வேளை  இது புதிய நிதியாண்டு என்பதால் என்பதாலோ அல்லது எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதாலோ  கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி, வருகிறேன். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!