Skip to content
Home » பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர்…. மருத்துவமனையில் பதுங்கினார்

பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர்…. மருத்துவமனையில் பதுங்கினார்

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்று அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் பாபுவின் பவுன்சர்கள், தனிப்படை போலீசார் ஆகியோர் ஊடகவியலாளர்களை விரட்டியடித்தனர்.

மேலும் நடிகர் மோகன் பாபு சில செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி  கொடூரமாக தாக்கிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் காயமடைந்த 2 ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களை தாக்கியது தொடர்பாக மோகன் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த  நடிகர் மோகன் பாபுவு  மருத்துவமனையில் போய் சேர்ந்துள்ளது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாக  அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தந்தை தன்னை தாக்கியதாக மகனும், மகன் தன்னை தாக்கியதாக தந்தையும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *