மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் நிகழ்ச்சி பதிவு செய்திருந்த ஸ்டுடியோவை அடித்து நொறுக்கினர்.
அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர மோகனிடம் முறையிட்டார். இந்த மனுவை இன்று மதியம் அனைத்து வழக்குகளும் முடிந்த பின்பு கடைசி வழக்காக எடுத்து விசாரிப்பதாக நீதிபதி அனுமதி வழங்கினார். இங்கு அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தால், 2 வாரமோ அல்லது 3 வாரமோ முன்ஜாமீன் கிடைக்கும். அதன் பின்பு மகாராஷ்டிரா சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் தனியாக முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து அவர் முன்ஜாமீன் பெற்று கொள்ள வேண்டும்.