ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. திருமலைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகாளஹஸ்தி அருகே கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் ஏழு பேர் பயணித்த போது, ஒருவர் பலத்த காயம் அடைந்து உயிர் தப்பினார்.. 3 பெண்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் விஜயவாடாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…
