Skip to content
Home » முறுக்கு விற்கசொல்வதா?ஆவின் முகவர்கள் திருச்சியில் ஆப்பாட்டம்

முறுக்கு விற்கசொல்வதா?ஆவின் முகவர்கள் திருச்சியில் ஆப்பாட்டம்

  • by Senthil

திருச்சி மாநகரில் உள்ள  ஆவின் முகவர்கள் கையில் மிச்சர் முறுக்கு பாக்கெட் வைத்துகொண்டு ஆவின் பால்பண்ணை  முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களை பால் விற்பனை செய்வதை விட மிக்சர் ,முறுக்குஅதிகமாக விற்பனை செய்ய வலியுறுத்துவதாகவும் காலாவதி ஆகும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மிச்சர் முறுக்கு பொருட்களை கொடுப்பதாகவும் குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர். பால்வினியோகம் தொடர்ந்து தாமதப்படுவதாகவும் அதனை சரி செய்யாமல் தங்களை தின்பண்டங்களை விற்க சொல்வது என்ன நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தரமற்ற மிக்சர் பாக்கெட்டுகளை கொட்டியும் அதன் காலாவதியான தேதியை குறித்தும் பேசி கோஷம் எழுப்பினர்.
இந்த பொருட்களும் அதிக விலையில் உள்ளதாகவும் தரமற்றதாக இருப்பதாகவும் ஆவின் முகவர்கள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!