Skip to content
Home » 10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

  • by Senthil

அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் அரசியல் விளம்பரங்களுக்கு பணத்தை ஆம் ஆத்மி கட்சி வாரி இறைத்து   வருவதாக டில்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனா குற்றஞ்சாட்டியிருந்தார்.  மேலும் 97 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு துணை நிலை ஆளுநர் சக்சேனா கடந்த டிசம்பர் 20ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் இதுபோன்று கடிதம் அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கெஜ்ரிவால் அரசு பதில் அளித்திருந்தது.

இந்நிலையில் 10 நாட்களுக்குள் 164 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் கட்சியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மத்திய தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சகம் ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!