அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது மிக பழைய வாய்ந்த ஆலயம் பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மாதுளை, திராட்சை,ஆப்பிள் ,ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக
அம்மனுக்கு பல்வேறு வகையான மூலிகைகள் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபஆராதனையும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து வணங்கி சென்றனர்.